கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

முப்படைகளின் தலைமை தளபதியாக அனில் செளஹான் நியமனம்

முப்படைகளின் தலைமை தளபதியாக அனில் செளஹான் நியமித்து மத்திய அரசு புதன்கிழமை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image

அனில் செளஹான்

Updated On :28 செப்டம்பர் 2022, 1:59 pm

DIN


முப்படைகளின் தலைமை தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் அனில் செளஹான் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், நாட்டின் ராணுவ விவகாரத் துறை செயலாளராகவும் அனில் செளஹான் பொறுப்பு வகிப்பார் எனவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. 

இந்திய ராணுவத்தின் கிழக்கு பிரிவுக்கு தளபதியாக இருந்த அனுபவம் கொண்ட அனில் செளஹான், ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் பதற்றமான சூழல்களில் திறம்பட பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சுமார் 40 ஆண்டுகள் வரை ராணுவத்தில் பணியாற்றி  லெப்டினென்ட் ஜெனரலாக அனில் செளஹான் ஓய்வு பெற்றவர்.

முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத் நீலகிரியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து தற்போது புதிய தலைமை தளபதி நியமிக்கப்பட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.