இது தொடா்பாக முதல்வா் கேஜரிவால் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: 2020-ஆம் ஆண்டில் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தியது, 24 மணி நேர மின்விநியோகத்தை அளிப்பது, அனல் மின் நிலையங்களை மூடியது, தூசு மாசுவைத் தடுத்தது, சிஎன்ஜி பேருந்துகள், மின்சார பேருந்துகளை போக்குவரத்தில் ஈடுபடுத்தியது உள்பட தில்லி அரசால் எடுக்கப்பட்ட குறிப்பிட்ட சில நடவடிக்கைகள் காரணமாக தலைநகரில் மாசு அளவு குறைந்திருக்கிறது. மத்திய அரசின் தேசிய தூய காற்று திட்ட அறிக்கையின்படி 2017-18-ஆம் ஆண்டை ஒப்பிடும் போது 2021-22-இல் தில்லியில் காற்று மாசுவில் குறிப்பிடத்தக்க மேம்பாடு உள்ளது. மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் காற்று மாசு அளவு 18.6 சதவீதம் குறைந்துள்ளது.