தனது சொத்து முழுவதையும் ராகுல் காந்திக்கு எழுதி வைத்த மூதாட்டி: ஏன் தெரியுமா?

டேஹ்ராடூனைச் சேர்ந்த 78 வயதாகும் புஷ்பா முஞ்சியால் என்ற மூதாட்டி, தனது பெயரில் இருக்கும் அனைத்து சொத்துக்களையும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பெயருக்கு எழுதிக் கொடுத்துள்ளார்.
தனது சொத்து முழுவதையும் ராகுல் காந்திக்கு எழுதி வைத்த மூதாட்டி: ஏன் தெரியுமா?
தனது சொத்து முழுவதையும் ராகுல் காந்திக்கு எழுதி வைத்த மூதாட்டி: ஏன் தெரியுமா?
Updated on
1 min read


டேஹ்ராடூனைச் சேர்ந்த 78 வயதாகும் புஷ்பா முஞ்சியால் என்ற மூதாட்டி, தனது பெயரில் இருக்கும் அனைத்து சொத்துக்களையும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பெயருக்கு எழுதிக் கொடுத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் அவரது யோசனைகளும் இந்த நாட்டுக்கு மிகவும் அவசியம் என்று கருதியதால், தனது சொத்துகளை அவரது பெயருக்கு எழுதி வைத்திருப்பதாக புஷ்பா கூறியுள்ளார்.

தனக்குச் சொந்தமான தங்க நகைகளும், 50 லட்சம் மதிப்பிலான சொத்துகளும் இதில் அடங்கும். இது குறித்து அவர் கூறுகையில், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் தங்களது இன்னுயிரை இந்த நாட்டுக்காக அர்ப்பணித்தனர். தற்போது சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் இந்த நாட்டுக்கு சேவை செய்ய தங்களையே அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து மூதாட்டி புஷ்பா எழுதியிருக்கும் உயில், முன்னாள் மாநில தலைவர் பிரீதம் சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com