மும்பையை யூனியன் பிரதேசமாக மாற்ற மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக சிவசேனை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரெளத் குற்றம்சாட்டியுள்ளார்.
வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த சிவசேனை கட்சியின் செய்தித் தொடர்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ரெளத், “மும்பையை யூனியன் பிரதேசமாக்குவது குறித்து மத்திய அரசு திட்டம் தீட்டி வருகிறது எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க | மோலி பேரழிவின் காரணத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்
இதற்காக மாதிரி வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு நிதிவசூலும் நடைபெற்று வருவதாக சஞ்சய் ரெளத் குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “இதுதொடர்பாக கடந்த 2 மாதங்களாக ரகசியக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை நிரூபிக்க என்னுடம் ஆதாரம் உள்ளது” எனத் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் பாஜக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கிரித் சோமையாவை குற்றம்சாட்டிய சஞ்சய் ரெளத் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடர பாஜக திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | ‘எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்’: ராகுல்காந்தி அழைப்பு
இதுகுறித்து மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கவனம் கொண்டுள்ளதாகவும், விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சஞ்சய் ரெளத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

த.வெ.க.வை ஆதரித்துக் கையெழுத்திட்ட அமமுக எம்எல்ஏ! டிடிவி சொல்வது உண்மையா?

இந்திய கடற்படையின் புதிய தளபதியாக கிருஷ்ணா சுவாமிநாதன் நியமனம்!

நாட்டின் முப்படைத் தலைமைத் தளபதியாக என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமனம்!

ஐடிஐ, டிப்ளமோ, சிஏ முடித்தவர்களுக்கு வேலை: எங்கு?
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

