தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

‘கூட்டணிக்கு மாயாவதி மறுத்துவிட்டார்’: ராகுல்காந்தி

உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுடன் இணைந்து தேர்தலை சந்திக்க மாயாவதி மறுத்துவிட்டதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 2:25 pm IST

உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுடன் இணைந்து தேர்தலை சந்திக்க மாயாவதி மறுத்துவிட்டதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மியிடம் ஆட்சியை இழந்தது.

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும், காங்கிரஸும் இணைந்து போட்டியிடவதற்கான வாய்ப்பை மாயாவதி மறுத்துவிட்டார் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

தலித் உண்மைகள் எனும் புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டு பேசிய ராகுல்காந்தி, “அரசியலமைப்பு என்பது இந்தியாவின் ஆயுதம். ஆனால் சரியான நிர்வாகம் இல்லாமல் அதற்கு மதிப்பில்லை. நாம் அரசியலமைப்பைக் காக்க வேண்டும் என பேசி வருகிறோம். ஆனால் அது இந்த நிர்வாகத்தின் மூலம்தான் அமல்படுத்தப்பட முடியும். இன்றைக்கு அரசின் அனைத்து அமைப்புகளும் ஆர்எஸ்எஸ் கைகளில் உள்ளன” எனத் தெரிவித்தார்.

“இது இன்றைக்கு மட்டுமான பிரச்னை இல்லை. காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட நாளிலிலிருந்து இது தொடங்குகிறது.பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் உளவு பார்க்கப்படுகின்றனர். ஊடகங்கள் பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ளன” என ராகுல்காந்தி குறிப்பிட்டு பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், “அமலாக்கத்துறை, சிபிஐ, பெகாசஸ் உளவு விவகாரம் போன்ற பிரச்னைகளால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக வெல்வதற்கு மாயாவதி தெளிவான பாதையை போட்டுக் கொடுத்தார். தேர்தல் இணைந்து போட்டியிட மாயாவதிக்கு அழைப்பு விடுத்தோம். முதல்வர் வேட்பாளராக அவரை முன்மொழியவும் தயாராக இருந்தோம். ஆனால் மாயாவதி அதனை மறுத்துவிட்டார்” எனத் தெரிவித்தார்.

“இதுதான் இந்தியாவின் உண்மைநிலை. அரசியலமைப்பு செயலிழக்கச் செய்யப்பட்டால் தலித்துகளும், சிறுபான்மையினரும், பழங்குடியினரும், ஏழைகளும், விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்படுவர்” என ராகுல்காந்தி பேசினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.