கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

ரயிலிலிருந்து தவறிவிழும் பயணிகளுக்கு இழப்பீடு? வழங்குமா ரயில்வேத் துறை

நெரிசலான ரயிலிலிருந்து தவறிவிழும் பயணிகளுக்கு ரயில்வேத் துறை இழப்பீடு வழங்க வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image
Updated On :26 ஏப்ரல் 2022, 1:46 pm

DIN

கூட்ட நெரிசலான ரயிலிலிருந்து தவறிவிழும் பயணிகளுக்கு ரயில்வேத் துறை இழப்பீடு வழங்க வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிகப்படியான நெரிசலால் தவறி விழுந்து படுகாயமடையும் பயணிகளுக்கு மேற்கு ரயிவேத் துறை ரூ.3 லட்சம் வரை இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு ரயிலில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தத பயணி ஒருவர் ரயில்வேத் துறையில் இழப்பீடு கோரிய நிலையில், அது நிராகரிக்கப்பட்டது. 

இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி பாரதி டாங்கீர் வழக்கை விசாரித்தார்.

ரயில்வே தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், இழப்பீடு வழங்குவது தொடர்பாக சட்டப்பிரிவு 124(A) கீழ் வரவில்லை என்றும், மனுதாரர் ஓடும் ரயிலில் ஏற முயன்றதாகவும் ரயில்வே தரப்பில் வாதிடப்பட்டது. 

இருதரப்பு வாதத்தைக் கேட்டறிந்த வழக்குரைஞர், ரயிலிலிருந்து தவறி விழுந்த முதியவருக்கு மேற்கு ரயில்வே ரூ.3 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும், நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். ஏற்கெனவே கூட்ட நெரிசலில் வரும் ரயிலில் அவர்கள் நுழைய் முற்படும்போது மற்றொருவர் உந்தித்தள்ளும்போது பயணிகள் விழுவதற்கு வாய்ப்புண்டு. இதனை தற்செயல் நிகழ்வாக ரயில்வேத் துறை ஏன் கருதக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.