4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மின்வெட்டு பிரச்னை: அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட தில்லி அமைச்சர்

ஒரு நாளைக்கும் குறைவான நிலக்கரியே இருப்பதாகவும் தில்லி மின்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

News image
மின்வெட்டு பிரச்னை: அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட தில்லி அமைச்சர்
Updated On :29 ஏப்ரல் 2022, 9:07 am

DIN

தில்லியில் நிலவும் கடுமையான மின்வெட்டு பிரச்னைக்கு இடையே, தில்லிக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு இல்லை என்றும், ஒரு நாளைக்கும் குறைவான நிலக்கரியே இருப்பதாகவும் தில்லி மின்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

கையிருப்பு இல்லை... கையிருப்பு என்றால், 21 நாள்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பில் இருப்பது. ஆனால், தில்லிக்கு மின்சாரம் வழங்கும் பல அனமில் நிலையங்களில் ஒரு நாளைக்குத்தேவையான மின்சாரம் தயாரிக்கும் நிலக்கரியை விட குறைவானதே கையிருப்பில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் ஏற்கனவே மின்வெட்டு பிரச்னை தலைதூக்கியிருக்கும் நிலையில், இந்த அபாயக் குரலை சத்யேந்திர ஜெயின் எழுப்பியுள்ளார்.

மின்சாரம் தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட்டால் அது தொடர்ந்து விநியோகம் செய்யப்படும். அப்போது எந்த பிரச்சினையும் இருக்காது. ஒரு வேளை நிலக்கரி தட்டுப்பாட்டால் அனல்மின் நிலையங்கள் மூடப்பட்டால் நிலைமை மோசமடையும். நாட்டில் தற்போது நிலக்கரி தட்டுப்பாடு நிலவுகிறது. வழக்கமாக 21 நாள்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பில் இருக்க வேண்டும். ஆனால், தற்போது பல அனல்மின் நிலையங்களில் ஒரு நாளைக்கும் குறைவான நிலக்கரியே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.