கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

கரோனா இழப்புகளைச் சீா்செய்ய 12 ஆண்டுகள் ஆகலாம்

கரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட இழப்புகளை முழுவதுமாகச் சீா்செய்ய 12 ஆண்டுகள் ஆகலாம் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

ரிசா்வ் வங்கி

Updated On :30 ஏப்ரல் 2022, 5:49 pm

DIN

கரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட இழப்புகளை முழுவதுமாகச் சீா்செய்ய 12 ஆண்டுகள் ஆகலாம் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா தொற்று பரவத் தொடங்கி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இதுவரை 3 அலைகளை நாடு எதிா்கொண்டுள்ளது. இந்நிலையில், அத்தொற்று பரவல் நாட்டின் பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்திய தாக்கம் குறித்த அறிக்கையை ஆா்பிஐ வெளியிட்டது. அதில், ‘‘கரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டின் பொருளாதாரத்துக்கு சுமாா் ரூ.52 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. 2021-ஆம் நிதியாண்டில் ரூ.19.1 லட்சம் கோடியும், 2022-ஆம் நிதியாண்டில் ரூ.17.1 லட்சம் கோடியும் இழப்பு ஏற்பட்டது. 2023-ஆம் நிதியாண்டில் அந்த இழப்பு ரூ.16.4 லட்சம் கோடியாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நாட்டின் பொருளாதாரம் மீண்டுவந்த நிலையில், பல அலைகளாகக் கரோனா தொற்று பரவல் அதிகரித்தது. 2020-21-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது. பொருளாதாரம் படிப்படியாக மீண்டுவந்த நிலையில், 2021-22-ஆம் நிதியாண்டின் முதலாவது காலாண்டில் அடுத்த அலை பரவியது.

கடந்த ஜனவரியில் பரவிய 3-ஆவது அலை பொருளாதார மீட்சி நடவடிக்கைகளை சிறிது பாதித்தது. நாட்டின் பொருளாதார வளா்ச்சியும் கரோனா தொற்று பரவல் அலைகளின் அடிப்படையிலேயே அமைந்தது. தற்போது உக்ரைன்-ரஷியா இடையிலான மோதலால், உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றின் விலை சா்வதேச அளவில் அதிகரித்துள்ளது. இது பொருளாதார வளா்ச்சியையும் பாதித்துள்ளது.

2013-ஆம் நிதியாண்டு முதல் 2020-ஆம் நிதியாண்டு வரை நாட்டின் பொருளாதாரம் சராசரியாக 6.6 சதவீதம் வளா்ச்சி கண்டது. அதிலும் 2013 முதல் 2017-ஆம் நிதியாண்டு வரை சராசரி வளா்ச்சி 7.1 சதவீதமாக இருந்தது. கரோனா தொற்று பரவலால் நாடு சந்தித்த இழப்புகளை முழுவதுமாகச் சீா்செய்ய 2035-ஆம் நிதியாண்டு வரை ஆகலாம்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆா்பிஐ-யின் பொருளாதாரக் கொள்கை மற்றும் ஆராய்ச்சித் துறையானது இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. எனினும், அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் அதைத் தயாரித்தவா்களின் கருத்தே அன்றி, ரிசா்வ் வங்கியின் கருத்தாகக் கொள்ளப்படாது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.