அர்பிதா முகர்ஜியிடம் விசாரணை: தெரிய வந்த முக்கிய தகவல்கள்

ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில் கைதான அர்பிதா முகர்ஜியின் அமலாக்கத்துறை விசாரணைக் காவல் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.
அர்பிதா முகர்ஜியிடம் விசாரணை: தெரிய வந்த முக்கிய தகவல்கள்
அர்பிதா முகர்ஜியிடம் விசாரணை: தெரிய வந்த முக்கிய தகவல்கள்
Updated on
1 min read

கொல்கத்தா: ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில் கைதான அர்பிதா முகர்ஜியின் அமலாக்கத்துறை விசாரணைக் காவல் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த ஆசிரியர் பணி நியமன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அர்பிதா முகர்ஜிக்குச் சொந்தமான வீடுகளில் இருந்து ரூ.52 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

வழக்கு விசாரணையின் முக்கிய தகவல்கள்

1. கொல்கத்தாவில் உள்ள ஃபோர்ட் ஓசிஸ் குடியிருப்புக்கு அமலாக்கத் துறை சீல் வைத்துள்ளது.
2. விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் அர்பிதாவுக்குச் சொந்தமான மூன்று விரல் நக அழகுநிலையங்களில் சோதனை நடத்தப்பட்டது.
3. இந்த அழகு நிலையங்களுக்கு அர்பிதா ஒரு ஜிஎஸ்டி எண் பயன்படுத்தியுள்ளார். மற்றொரு பயன்படுத்தாத ஜிஎஸ்டி எண்ணும்வைத்துள்ளார்.
4. தனது குடியிருப்புகளுக்கு ஏராளமான போலி சாவிகள் இருந்ததாகவும் அர்பிதா கூறியுள்ளார்.
5. குடியிருப்புகளிலிருந்து கைப்பற்றப்பட்ட பணம் தனது கவனத்துக்கு வராமலேயே வைக்கப்பட்டவை என்றும் தெரிவித்துள்ளார்.
6. பார்த்தா சாட்டர்ஜி, விசாரணைக்கு முழு ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் ஆசிரியா் பணி நியமன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அம்மாநில அமைச்சா் பாா்த்தா சட்டா்ஜியின் நெருங்கிய உதவியாளா் அா்பிதா முகா்ஜி வீட்டிலிருந்து ரூ.21 கோடி ரொக்கத்தை அமலாக்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கைப்பற்றிய நிலையில், மற்றொரு வீட்டிலிருந்து புதன்கிழமை ரூ.29 கோடிக்கு ரொக்கப்  பணத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

மேற்கு வங்கத்தில், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசில் தொழில் துறை அமைச்சராக இருந்த பாா்த்தா சட்டா்ஜி முன்பு கல்வி அமைச்சராக இருந்தபோது ஆசிரியா் பணி நியமனம் தொடா்பாக முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடா்பாக அமலாக்கத் துறையினா் கடந்த ஜூலை 22-இல் அா்பிதா முகா்ஜியின் அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தினா். இதில் ஏராளமான நகைகளையும், ரூ.20 கோடி ரொக்கத்தையும் அமலாக்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றினா். இதுதொடா்பாக பாா்த்தா சட்டா்ஜியும் அா்பிதா முகா்ஜியும் 23-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.

நேற்று சோதனை நடந்த வீட்டின் பூட்டை, குடியிருப்பின் நலச் சங்க செயலாளர்கள் முன்னிலையில், உடைத்த அமலாக்கத் துறையினர், பல அலமாரிகள், பீரோக்களிலிருந்து இந்த பணத்தைக் கைப்பற்றியதாகக் கூறுகிறார்கள்.

சட்டர்ஜி மற்றும் முகர்ஜியிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த துப்புகளின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுபோல தொடர்ந்து பல்வேறு முகவரிகளிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com