காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையாவின் பிறந்தநாளை காங்கிரஸ் கட்சியினர் நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடினர்.
கர்நாடகத்தின் முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையாவுக்கு இன்று 75 ஆவது பிறந்தநாள். அவர் முதல்வராக இருந்தபோது, அவரது 75 ஆவது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாட திட்டமிட்டு அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று கர்நாடக மாநிலம் தாவணகெரேயில் மிகப்பெரிய மாநாடு நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
சித்தராமையாவின் பிறந்தநாள் மட்டுமின்றி இது கட்சி மாநாடாக பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. சுமார் 6 லட்சம் பேர் வரையில் இதில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | கர்நாடகத்தில் 6 கிமீ தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல்! ஏன் தெரியுமா?
முன்னதாக, சித்தராமையாவின் 75 ஆவது பிறந்தநாளை நள்ளிரவு முதலே கொண்டாடத் தொடங்கிவிட்டனர் காங்கிரஸ் கட்சியினர். நேற்று நள்ளிரவு ஹூப்ளியில் உள்ள நட்சத்திர விடுதியில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். முன்னாள் அமைச்சர் டி.கே. சிவகுமார் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும், பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பீரை பீய்ச்சி அடிக்கும் ஒரு விடியோவும் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.