இந்தியாவில் இதுவரை 348 சீன செயலிகள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில், ஸ்மார்ட்போன்களில் தரவிறக்கம் செய்யப்படும் செயலிகள் மூலம் தரவுகள் திருடப்படுகின்றனவா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
இதையும் படிக்க: ’நரேந்திர மோடியைக் கண்டு பயப்பட மாட்டோம்’: ராகுல் காந்தி
இதற்கு பதிலளித்த மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ‘சீன தயாரிப்புகளான 348 செயலிகள் தரவுகளைத் திருடியுள்ளன. அவற்றை மத்திய உள்துறை அமைச்சகத்தின் பார்வைக்கு கொண்டு சென்றோம். பின், அச்செயலிகளை இந்தியாவில் பயன்பாட்டிற்கு வர முடியாதபடி முடக்கியுள்ளோம்’ எனத் தெரிவித்தார்.
மேலும், தரவிறக்கம் செய்யப்பட்ட அச்செயலிகள் சீனாவை மையமாகக் கொண்டிருந்தாலும் பல்வேறு நாடுகளிலிருந்து தயாரிக்கப்பட்டவை என்றும் மத்திய அரசின் எழுத்துப்பூர்வ ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் வாக்கு சதவீதம் எவ்வளவு?

கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
அமெரிக்காவிலிருந்து வெளியேறும் இந்தியர்கள்! ஏன்?
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


