இமாச்சல் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு: போக்குவரத்து நிறுத்தம்

இமாச்சலப் பிரதேசத்தின் கின்னவூர் மாவட்டத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
இமாச்சல் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு: போக்குவரத்து நிறுத்தம்

இமாச்சலப் பிரதேசத்தின் கின்னவூர் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

பாபா நகர் அருகே நிலச்சரிவு ஏற்பட்டதால் பெரோஸ்பூர்-ஷிப்கி லா தேசிய நெடுஞ்சாலை எண் 5ல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கின்னவூர் மாவட்ட அவசர செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. 

பாபா நகர் மாவட்ட நீதிபதி பிம்லா சர்மா கூறுகையில், கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, நெடுஞ்சாலையில் கற்கள் குவிந்துள்ளது. சாலையை சுத்தப்படுத்தும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். சரிசெய்யப் பின்னர், மீண்டும் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com