உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் அது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
Published on
Updated on
1 min read


லக்னௌ: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் அது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை கட்டுப்பாட்டு அறையின் வாட்ஸ்ஆப் உதவி எண்ணுக்கு ஆகஸ்ட் 2ஆம் தேதி, முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகக் கூறப்படுகிறது. வாட்ஸ்ஆப் தகவலில் இன்னும் 3 நாள்களுக்குள் வெடிகுண்டு வைக்கப்போகிறோம் என்று கூறப்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பல துறை அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com