
உத்தரப் பிரதேசத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பெற்ற மகனையே, காதலருடன் சேர்ந்து கொலை செய்துள்ள தாயை போலீசார் புதன்கிழமை கைது செய்தனர்.
தாய் முனேஷ் மற்றும் அவரது காதலர் சதேந்திரா ஆகியோர் திங்கள்கிழமை அதிகாலை தனது 16 வயது மகனான ஆஷிஷைக் கொன்று, அவரது உடலை ஒரு குழாய்க் கிணற்றில் வீசியதாக மூத்த காவல் கண்காணிப்பாளர் வினித் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
பின்னர் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து விதவையான பெண்ணிடம் விசாரிக்கையில், தொடர்ந்து தங்கள் உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தான். அதனால் மகன் ஆஷிஷை கூட்டாக இணைந்து கொலை செய்தோம் என்று இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கணவர் இறந்த பிறகு அந்தப் பெண் சதேந்திராவுடன் உறவை வளர்த்துக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.