நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தெலங்கானாவில் சுதந்திர தினப் பேரணியை துப்பாக்கியால் சுட்டு துவக்கி வைத்த அமைச்சர்

தெலங்கானாவில் சுதந்திர தினப் பேரணியை விளையாட்டுத்துறை அமைச்சர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு துவக்கி வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2022, 2:03 pm

DIN

தெலங்கானாவில் சுதந்திர தினப் பேரணியை விளையாட்டுத்துறை அமைச்சர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு துவக்கி வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி தெலங்கானா மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் சுதந்திர தினப் பேரணிகள் இன்று நடத்தப்பட்டன. பேரணியில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் மஹாபூப்நகர் நகரில் நடைபெற்ற சுதந்திர தினப் பேரணியை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் ஸ்ரீனிவாஸ் கவுட் துவக்கி வைத்தார். ஆனால் அவர் பேரணியை துவக்கி வைப்பதற்கு முன் அருகிலிருந்த காவலரிடம் இருந்து துப்பாக்கியை வாங்கி வானத்தை நோக்கி இரண்டு முறை சுட்டார்.

இந்நிகழ்வு தெலங்கானாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அமைச்சர் மீது ஆயுத சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுமா என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனிடையே பேரணியில் சுடப்பட்ட தோட்டாக்கள் உண்மையானவையா அல்லது கொண்டாட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் போலி தோட்டாகளா என்பது உடனடியாகத் தெரியவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.