கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

20 நிமிடங்களுக்கு நடந்த பிரதமர்-முதல்வர் சந்திப்பு: முக்கிய அம்சங்கள்!

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசினார்.

News image

பிரதமர்-முதல்வர் சந்திப்பு

Updated On :17 ஆகஸ்ட் 2022, 12:45 pm

DIN

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசினார். இதில் தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்து, முக்கிய பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடியிடம் முதல்வர் விவாதித்தார். 

மாலை 4 மணிக்குத் தொடங்கிய இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்களுக்கு நடைபெற்றது. இதில் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. 

முன்னதாக தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தில்லியில் நடந்த கடந்த சந்திப்புகளில் முன்வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளும் நினைவூட்டப்படும் எனத் முதல்வர் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

அதன்படி, முன்பு வைக்கப்பட்டிருந்த கோரிக்கைகளான நீட் விலக்கு, புதிய கல்வி கொள்கை காவிரி விவகாரம், மேக்கேதாட்டு அணை விவகாரம், முல்லைப் பெரியாறு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

இதேபோன்று, நதிநீர் இணைப்பு, கட்சத்தீவு மீட்பு, மீனவர்களுக்கான தேசிய ஆணையம், மின்சாரத் திருத்தச்சட்டத்தை திரும்பப் பெறுதல் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. 

மேலும், தமிழகத்திற்கு நிலுவையிலுள்ள தொகையினை விடுவிப்பது, ஜிஎஸ்டி நிலுவைத் தொகையினை வழங்குவது குறித்தும் விவாதித்தார். மழைக்காலம் வரவுள்ளதால், தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிவாரணத் தொகை குறித்தும், சென்னை விமான நிலைய விரிவாக்கம், கோவை விமான நிலையம், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணி போன்ற தமிழகத்தின் கட்டமைப்பு வசதிகள் குறித்தும் பிரதமரிடம் முதல்வர் விவாதித்ததாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.