தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

'கரோனா இன்னும் இருக்கிறது; பூஸ்டர் தடுப்பூசி அவசியம்'

கரோனா தொற்று இன்னும் பரவி வருவதால் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அவசியம் என்று நீதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார். 

News image

கோப்புப் படம்

Updated On :18 ஆகஸ்ட் 2022, 11:46 am IST

கரோனா தொற்று இன்னும் பரவி வருவதால் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அவசியம் என்று நீதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார். 

நாட்டில் கரோனா பாதிப்பு இன்னும் இருந்து வருகிறது. சமீபமாக ஒரு சில பகுதிகளில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. 

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாட்டில் புதன்கிழமை கரோனா பாதிப்பு 9,062 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று எண்ணிக்கை 12,608 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1,01,343 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில்  நீதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் கூறுகையில், 'கரோனா இன்னும் இருக்கிறது. சமீப நாள்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது. எனவே, இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மூன்றாவது தவணையான முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி(பூஸ்டர் டோஸ்) செலுத்த வேண்டும். 

கரோனா இன்னும் இருப்பதால் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அவசியம். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி ஆகியவற்றை தொடர வேண்டும்' என்று கூறியுள்ளார். 

உலகம் முழுவதும் கடந்த நான்கு வாரங்களில் இறப்பு சதவிகிதம் 35% அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

நாட்டில் 93,86,47,700 பேர் 2-வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் அவர்களில் 1,29,053,987 பேர் பூஸ்டர் டோஸ் போட்டுகொண்டுள்ளனர். இது மொத்த எண்ணிக்கையில் 13 சதவீதம் ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.