தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஜம்மு-காஷ்மீரில் வெளிமாநிலத்தவர்கள் வாக்களிக்கக் கூடாது: தலைவர்கள் கருத்து

ஜம்மு - காஷ்மீரில் இனி வெளிமாநிலத்தவர்களும் வாக்களிக்கலாம் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்ததைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் அதிருப்தித் தெரிவித்து வருகின்றனர்.

News image

மெஹபூபா முஃப்தி (கோப்புப் படம்)

Updated On :31 அக்டோபர் 2022, 7:04 am

ஜம்மு - காஷ்மீரில் இனி வெளிமாநிலத்தவர்களும் வாக்களிக்கலாம் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்ததைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் அதிருப்தித் தெரிவித்து வருகின்றனர்.

ஜம்மு - காஷ்மீரின் தலைமைத் தோ்தல் அதிகாரி ஹிருதேஷ் குமாா் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்து புதிய வாக்களர்களின் எண்ணிக்கையைப் பகிர்ந்துகொண்டார்.

அப்போது, ’ஜம்மு-காஷ்மீரில் தற்போது வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றோரின் எண்ணிக்கை 76 லட்சமாகும். தற்போது கூடுதலாக 20 முதல் 25 லட்சம் போ் வரை இறுதிப் பட்டியலில் இடம்பெற உள்ளதால், வாக்காளா்களின் மொத்த எண்ணிக்கை 98 லட்சத்தை எட்டும். வெளிமாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளர்கள், மாணவா்கள் மற்றும் ஊழியா்கள் ஜம்மு-காஷ்மீரில் வசிக்கும்பட்சத்தில், வாக்காளா் பட்டியலில் இணைந்து கொள்ளலாம். அவர்கள் இனி ஜம்மு - காஷ்மீரின் நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் இதர தேர்தல்களிலும் வாக்களிக்கலாம்’ எனத் தெரிவித்தார். 

இந்நிலையில், வெள்மாநிலத்தவர்கள் ஜம்மு - காஷ்மீரில் வாக்களிக்க வைக்கும் செயல் பாஜகவின் அரசியல் திட்டங்களில் ஒன்று என அம்மாநிலத்தில் உள்ள ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாடு கட்சி உள்பட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இந்த அறிவிப்பிற்கு அதிருப்தித் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா  'ஜம்மு காஷ்மீரின் உண்மையான வாக்காளர்களின் ஆதரவு குறித்து பாஜக பாதுகாப்பற்றதாக உணர்கிறதா? இங்குள்ள இடங்களைக்  கைப்பற்ற தற்காலிக வாக்காளர்களை கொண்டுவர வேண்டுமா? ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு  வாக்குரிமையைப் பயன்படுத்த வாய்ப்பு அளிக்கப்படும்போது இவை எதுவும் பாஜகவுக்கு உதவாது’ எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தியும், ‘ஜம்மு - காஷ்மீரில் தேர்தலை ஒத்திவைப்பதற்கான இந்திய அரசின் முடிவு, பாஜகவுக்கு ஆதரவாக உள்ளது. இப்போது வெளி மாநிலத்தவரை வாக்களிக்க அனுமதிப்பது தேர்தல் முடிவுகளை பாதிக்கும். உள்ளூர் மக்களை வலுவிழக்கச் செய்ய இரும்புக்கரம் கொண்டு ஆட்சியைத் தொடர்வதே இவர்களின் உண்மையான நோக்கம்’ எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.