அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தருமபுரி-காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என மூன்று நாள்கள் தருமபுரி மாவட்டத்தில் நடை பயணம் மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டில் மிகவும் பின்தங்கிய மாவட்டமான தருமபுரி மாவட்டத்தில் வாழ்வாதாரம், வேலை வாய்ப்பு, வேளாண்மை, தொழில் வளம்,குடிநீர் பிரச்னை, நிலத்தடி நீரில் புளோரோசிஸ் நச்சுப்பொருள் கலப்பால் உடல்நலம் மனநல பாதிப்பு, மூன்றிலிருந்து ஐந்து லட்சம் பேர் வேலை தேடி வெளி மாவட்டத்திற்கு செல்லுகிறார்கள். இந்த அனைத்து பிரசனைகளுக்கும் ஒரே தீர்வு காவிரியில் ஓடுகின்ற உபரி நீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளம், அணைகளில் நிரப்புவது தான் தீர்வாகும்.