
கோப்புப்படம்
புது தில்லி: சர்வதேச அளவில் மிகப்பெரிய பாஸ்போர்ட் மற்றும் விசா முறைகேட்டில் ஈடுபட்டு வந்த நான்கு பேரை இந்திரா காந்தி விமான நிலைய காவல்துறையினர் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.
விமான நிலைய காவல்துறை டிசிபி தனு ஷர்மா கூறுகையில், அவர்களிடமிருந்து 325 போலி பாஸ்போர்ட் மற்றும் 175 போலி விசாக்கள் மற்றும் இதர ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறினார்.
இதையும் படிக்க | பயணிகளின் விவரங்களை பகிரும் தகவல் கற்பனையானது: இந்திய ரயில்வே
இந்த போலி நிறுவனம் குறித்து காவல்துறைக்கக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் முக்கிய குற்றவாளி ஸாகிர் யூசுப் கைது செய்யப்பட்டுள்ளார்.
குஜராத்திலிருந்து குவைத்துக்குச் சென்ற இந்தியர் ஒருவர் போலி பாஸ்போர்ட் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கும்பல் பிடிபட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...