ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

பிகாரில் அதிர்ச்சி... தினக்கூலி ஒருவருக்கு ரூ.37.5 லட்சம் செலுத்துமாறு வருமான வரித்துறை நோட்டீஸ்!

பிகாரில்  தினக்கூலி வேலை செய்யும் ஒருவருக்கு ரூ. 37.5 லட்சம் வருமான வரி "பாக்கி" செலுத்துமாறு வருமான வரித் துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

News image
வருமானவரித் துறை
Updated On :21 ஆகஸ்ட் 2022, 11:53 am

DIN

ககாரியா: பிகாரில்  தினக்கூலி வேலை செய்யும் ஒருவருக்கு ரூ. 37.5 லட்சம் வருமான வரி "பாக்கி" செலுத்துமாறு வருமான வரித் துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பிகார் மாநிலம், ககாரியா மாவட்டத்தில் உள்ள மகௌனா கிராமத்தில் வசிக்கும் கிரிஷ் யாதவ், இவர் தினமும் கூலி வேலைக்குச் சென்று ஒரு நாளைக்கு சுமார் ரூ. 500 சம்பாதித்து வருகிறார். 

இந்நிலையில், இவருக்கு ரூ.37.5 லட்சம் வருமான வரி பாக்கி உள்ளதாகவும், அதனை செலுத்துமாறு வருமான வரித் துறையினர் அனுப்பியுள்ள நோட்டீஸை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். 

இதையடுத்து கிரிஷ் யாதவ் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்துள்ளார்.

"கிரிஷ் யாதவ் அளித்த தகவலின் அடிப்படையில் நாங்கள் வழக்குப் பதிவு செய்து போலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும், முதல்கட்ட விசாரணையில் இது ஒரு மோசடி வழக்காகத் தெரிகிறது" என்று அலவுலி காவல் நிலைய காவல் அதிகாரி புரேந்திர குமார் கூறினார்.

மேலும், புகார்தாரர் தனது பெயரில் வழங்கப்பட்ட பான் எண்ணுக்கு எதிராக நோட்டீஸைப் பெற்றுள்ளார் என்று காவல் அதிகாரி கூறினார்.

"தில்லியில் தான் சிறிய வேலைகளைச் செய்து வந்தேன். அதைக் கொண்டு ஒரு முறை பான் கார்டைப் பெற முயற்சித்தேன் என்று கிரிஷ் யாதவ் கூறினார். 

மேலும், அந்த நோட்டீசில், கிரிஷ் ராஜஸ்தானைச் சேர்ந்த நிறுவனத்துடன் தொடர்புடையவர் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், அவர் அந்த அந்த மாநிலத்திற்கு ஒருபோதும் சென்றதில்லை" என்று கிரிஷ் யாதவ் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.