தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

பலாத்காரத்துக்குள்ளான பெண்ணின் சகோதரர் மரணம்: மரத்தில் தொங்கிய சடலம்

அஹர் பகுதியைச் சேர்ந்த கிராமத்தில் 16 வயது பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி ஒரு வாரமான நிலையில், அவரது சகோதரரின் சடலம் மரத்தில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பலாத்காரத்துக்குள்ளான பெண்ணின் சகோதரர் மரணம்

Published On :1 பிப்ரவரி 2024, 3:38 pm IST


புலந்த்சஹர்: உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சஹர் மாவட்டம் அஹர் பகுதியைச் சேர்ந்த கிராமத்தில் 16 வயது பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி ஒரு வாரமான நிலையில், அவரது சகோதரரின் சடலம் மரத்தில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் அந்த கிராமத்தின் தலைவர் உள்பட ஆறு பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பலியானவரின் தந்தை இது குறித்துக் கூறுகையில், ஆகஸ்ட் 20ஆம் தேதி, தங்களது 23 வயது மகனை, கிராமத் தலைவர் போலு சிங் உள்ளிட்ட சிலர், சகோதரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்துப் பேசுவதற்காக அழைத்துச் சென்றுள்ளனர். பிறகு, தங்கள் மகனை மரத்தில் சடலமாகத்தான் பார்த்ததாகக் கூறுகிறார்.

அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததாகவும் இது நிச்சயம் கொலைதான் என்றும் தந்தை காவல்நிலையத்தில் கூறியுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலை என்றுதான் தெரிய வந்துள்ளது. எனினும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம், உடல் கூறாய்வு முடிவுக்காக காததிருக்கிறோம் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.