பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

‘காங்கிரஸ் கட்சி சீர்குலைவது வேதனையாக உள்ளது’: உமர் அப்துல்லா

நாட்டின் பழமையான கட்சி சீர்குலைவது வேதனையளிப்பதாக ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

News image
உமர் அப்துல்லா
Updated On :26 ஆகஸ்ட் 2022, 9:33 am

DIN

நாட்டின் பழமையான கட்சி சீர்குலைவது வேதனையளிப்பதாக ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான குலாம்நபி ஆசாத் அக்கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் விலகியதுடன் அடிப்படை உறுப்பினர் பொறுப்பையும் ராஜிநாமா செய்துள்ளது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உமர் அப்துல்லா, “காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அக்கட்சியிலிருந்து விலகிய நிலையில் அவர் எழுதியுள்ள கடிதத்தை படிப்பது வலிமிகுந்ததாக உள்ளது. நாட்டின் பழமையாக கட்சி சீர்குலைவதைப் பார்ப்பதற்கு கவலையாகவும், வேதனையாகவும் உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.