ஜம்மு- காஷ்மீரில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து: 7 பேர் பலி

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பள்ளத்தில் கார் விழுந்து 7 பேர் பலியாகியுள்ளனர். 
ஜம்மு- காஷ்மீரில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து: 7 பேர் பலி

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பள்ளத்தில் கார் விழுந்து 7 பேர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை சத்ரூ என்ற இடத்தில் டாடா சுமோ கார் ஒன்று சென்றுகொண்டிருந்தபோது, திடீரென கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 4 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com