ஜம்மு- காஷ்மீரில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து: 7 பேர் பலி

ஜம்மு- காஷ்மீரில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து: 7 பேர் பலி

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பள்ளத்தில் கார் விழுந்து 7 பேர் பலியாகியுள்ளனர். 
Published on

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பள்ளத்தில் கார் விழுந்து 7 பேர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை சத்ரூ என்ற இடத்தில் டாடா சுமோ கார் ஒன்று சென்றுகொண்டிருந்தபோது, திடீரென கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 4 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com