பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

குஜராத்தில் பேரணியைத் தொடங்கினார் பிரதமர் மோடி

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடியின் பிரசாரப் பேரணி இன்று மாலை 4 மணியளவில் தொடங்கியது.

News image

பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி

Updated On :1 டிசம்பர் 2022, 12:13 pm

DIN


குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடியின் பிரசாரப் பேரணி இன்று மாலை 4 மணியளவில் தொடங்கியது.

முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவை குறிவைத்து பிரசாரத்தில் ஈடுபடும் நோக்கத்தில் இந்தப் பேரணி தொடங்கியுள்ளது.

குஜராத்தில் முதல் கட்டமாக 89 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மாலை 3 மணி நிலவரப்படி 48.48 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. 

இந்நிலையில், இரண்டாம் கட்டத் தேர்தலை குறிவைத்து பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். பிரசாரத்தின் ஒரு பகுதியாக இன்று 50 கிலோமீட்டர் பேரணியைத் தொடங்கியுள்ளார்.

மாலை 5 மணியளவில் தொடங்கிய பேரணி, 6.30 மணியளவில் காந்தி நகர் தெற்கு தொகுதியில் நிறைவு பெறுகிறது. சுமார் 35 இடங்களில் வாகனத்தை நிறுத்தி வாக்கு சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.