இந்நிலையில், வியாழக்கிழமை மாலை காந்திநகரில் நகரில் மும்பை புறப்பட்ட வந்தே பாரத் ரயில் குஜராத் மாநிலம் உத்வாதா - வாபி ரயில் நிலையங்களுக்கு இடையே வந்துகொண்டிருந்த போது மாலை 6.23 மணியளவில் மாடு மீது மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. இதில், ரயிலின் முன்பக்கம் லேசாக சேதமடைந்தது. இதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டது. ரயில் இயக்குவதில் சிரமம் எதுவுமில்லை என்ற நிலையில், சிறிது நேரம் நிறுத்தப்பட்ட பிறகு, மாலை 6.35 மணிக்கு மீண்டும் ரயில் புறப்பட்டது. கடந்த முறை நடந்த இதுபோன்ற விபத்துகளால் ரயிலின் முன்பக்கம் சேதமடைந்ததை அடுத்து அது மாற்றப்பட்டது.