
ஆந்திரத்தில் பசுவை தொட்டு வணங்கச் சென்ற பாஜக எம்பியை அப்பசு எட்டி உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், குண்டூர் மிர்ச்சி ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலக திறப்பு விழாவுக்காக குண்டூர் மிர்ச்சி யார்டுக்கு எம்பி ஜிவிஎல் நரசிம்மராவ் நேற்று சென்றிருக்கிறார். அப்போது வீடு திறப்பு விழாவுக்காக கொண்டு வரப்பட்ட பசுவை தொட்டு வணங்க அதன் பக்கத்தில் அவர் சென்றுள்ளார்.
இதையும் படிக்க- வாராணசியில் பாரதியாா் வாழ்ந்த இல்லத்தின் அறை புனரமைப்பு: முதல்வா் ஸ்டாலின் திறந்து வைத்தார்
பசுவை நரசிம்மராவ் தொட்டவுடன் அந்த பசு அவரை எட்டி உதைத்தது. பின்னர் சகஜ நிலைக்கு திரும்பிய எம்பி, மீண்டும் அப்பசுவை தொட்டு வணங்க முயன்றார். ஆனால் அப்போதும் அப்பசு எகிறியது. உடனே சுதாகரித்துக் கொண்ட நரசிம்மராவ், அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
இந்த விடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வணங்கச் சென்ற பாஜக எம்பியை பசு எட்டி உதைத்த சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் சற்று பதற்றத்தை ஏற்படுத்தியது.