கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மேற்கு வங்கத்தில் 70 பேருடன் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது: ஒருவர் பலி!

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில்  70 பேருடன் சென்ற பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரு பெண் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர். 

News image
கோப்புப்படம்
Updated On :14 டிசம்பர் 2022, 6:22 am

DIN

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில்  70 பேருடன் சென்ற பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரு பெண் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர். 

நெடுஞ்சாலை-26இல் உள்ள இலாஹிபூர் பகுதியில் இன்று காலை 4.30 மணியளவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகிலிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. 

இந்த விபத்தில் 50 வயதான பெண் (தபசி ஹல்டர்) உயிரிழந்தார். பெரும்பாலான பயணிகள் காயமடைந்தனர். இவர்கள் அருகிலுள்ள கிராமப்புற மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 

காயமடைந்தவர்களில் 12 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர்கள் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பயணிகள் பேருந்து திங்கள்கிழமை புருலியா மாவட்டத்தில் உள்ள ரெய்திகியில் இருந்து அயோத்தி மலைகளுக்குச் சுற்றுலா சென்றதாகவும், திரும்பி வந்துகொண்டிருந்த போது விபத்து நேர்ந்ததாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.