சீனாவின் பெயரால் பயத்தைப் பரப்புகிறார் ராகுல்: அனுராக் தாக்குர்!

ராகுல் காந்தி சீனாவின் பெயரால் பயத்தைப் பரப்புகிறார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆயுதப் படைகள் மீதுள்ள நம்பிக்கையை இழந்துவிட்டார் என்றும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் குற்றம் சாட்டியுள்ளார். 
சீனாவின் பெயரால் பயத்தைப் பரப்புகிறார் ராகுல்: அனுராக் தாக்குர்!

ராகுல் காந்தி சீனாவின் பெயரால் பயத்தைப் பரப்புகிறார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆயுதப் படைகள் மீதுள்ள நம்பிக்கையை இழந்துவிட்டார் என்றும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் குற்றம் சாட்டியுள்ளார். 

சீனர்கள் ராணுவ வீரர்களை அடிக்கின்றனர் என்ற காந்தியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த தாக்குர், டோக்லாமில் இந்திய வீரர்கள் சீன வீரர்களுடன் சண்டையிட்டபோது, முன்னாள் காங்கிரஸ் தலைவர் சீனர்களுடன் சூப் குடிப்பதில் பிஸியாக இருந்தார். 

சீனா என்ற பெயரில் பயத்தைப் பரப்புவதை இவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் இது 1962இன் இந்தியா அல்ல, இது 2014இன் இந்தியா. 

பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா முன்னேறி வருகிறது. 

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது ஆயுதப் படைகளுக்கு குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் அல்லது ரஃபேல் போர் விமானங்கள் மூலம் அரசு அதிகாரம் அளிக்கவில்லை என்றார்.

இன்று இந்தியாவில் 300க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தியா பாதுகாப்பு உபகரணங்களின் ஏற்றுமதியாளராக உள்ளது, இறக்குமதியாளராக இல்லை. இதுதான் ஆத்மநிர்பர் பாரத் என்றார்.

சீனா போருக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில், இந்திய அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது என்றும், அச்சுறுத்தலைப் புறக்கணிக்க முயல்வதாகவும் ஜெய்ப்பூரில் செய்தியாளர் கூட்டத்தில் காந்தி உரை நிகழ்த்தினார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com