தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்: ஹிமாசல் முதல்வர்

ஹிமாசல பிரதேசத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு தெரிவித்துள்ளார்.

News image
Updated On :25 டிசம்பர் 2022, 11:18 am

DIN

ஹிமாசல பிரதேசத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும். அது தொடர்பாக இன்று கூட்டத்தை கூட்டியுள்ளோம். மாநிலத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றிய எங்கள் தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்க உள்ளோம்". இவ்வாறு அவர் கூறினார். 

இம்மாநிலத்தில் அண்மையில் நடந்த பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதையடுத்து மாநிலத்தின் புதிய முதல்வராக சுக்விந்தர் சிங் சுக்கு டிசம்பர் 11ஆம் தேதி பதவியேற்றார். 

பதவியேற்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எம்பி. ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.