ஹரியாணா மாநிலத்திலுள்ள பானிபட் பகுதி அதிக விபத்துகள் நடக்கும் இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி - அம்பாலா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த பகுதியில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 41 கோர விபத்துகள் நடந்துள்ளதாகவும், அதில் 26 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை அந்தந்த மாநில அரசுகளுடன் சேர்ந்து, பகுதிகளை இணைக்கும் வகையில் நெடுஞ்சாலைகளை அமைத்து வருகிறது. மேலும், விபத்துகளைத் தவிர்க்கவும் மாநில அரசுகள் பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. எனினும் விதிமீறல், அதிக வேகம், கட்டுப்பாடற்ற இயக்கம் போன்றவற்றால் நெடுஞ்சாலைகளில் விபத்துகள் நேரிடுகின்றன.
அந்தவகையில் ஹரியாணா மாநிலம் பானிபட் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 41 விபத்துகள் நடந்துள்ளன. அதில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தில்லி - அம்பாலா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த பகுதியை அதிகாரிகள், கருப்பு இடமாக அறிவித்துள்ளனர். அதிக விபத்துகள் நேரிட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்ததால் அப்பகுதியை அதிகாரிகள் இவ்வாறு குறிப்பிடுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
தொகுதி நலனுக்காக தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம்

மே 30 - நெல்லை - திருச்செந்தூர் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்!

அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில்... ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல: சிபிஎம் விமர்சனம்!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



