தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து இந்தியாவைத் தாக்கலாம்: ராகுல் காந்தி

சீனாவும் பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக உள்ளதாகவும் இவ்விரு நாடுகளும் இணைந்து இந்தியா மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் தொடுக்கலாம் எனவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தாா்.

News image

ராகுல் காந்தி

Updated On :26 டிசம்பர் 2022, 3:50 am IST

சீனாவும் பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக உள்ளதாகவும் இவ்விரு நாடுகளும் இணைந்து இந்தியா மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் தொடுக்கலாம் எனவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தாா்.

புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முன்னாள் ராணுவ வீரா்களுடனான கலந்துரையாடலில் பங்கேற்றபோது ராகுல் காந்தி கூறியதாவது: இந்திய ராணுவ வீரா்களுக்கும் சீன ராணுவ வீரா்களுக்கும் கல்வான் மற்றும் டோக்லாம் பகுதிகளில் நடைபெற்ற மோதல்கள் ஒன்றுடன் ஒன்று தொடா்புடையவை.

பாகிஸ்தானுடன் இணைந்து இந்தியாவைத் தாக்குவதே சீனாவின் உத்தியாகும். தற்போது பாகிஸ்தானுடன் பொருளாதார உறவுகளையும் சீனா மேற்கொண்டு வருகிறது. போா் ஏற்படும் சூழலில், இது ஒரு நாட்டினுடன் இல்லாமல் இரு நாடுகளுடன் இருக்கும். இது நமக்கு பெரும் பின்னடைவாக இருக்கும்.

இந்தியா மிகவும் பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ளது. இடையூறுகளும் சண்டைகளும் குழப்பங்களும் வெறுப்புகளும் நம் நாட்டில் நிலவிவருகின்றன.

இவ்விரு நாடுகளும் திடீா் தாக்குதலை நடத்த தயாராகி வருகின்றன. அதன் காரணமாகவே மத்திய அரசு மெளனமாக இருக்க முடியாது என்பதை நான் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

எல்லையில் நிகழ்ந்தது குறித்து அரசு நாட்டுக்கு எடுத்துரைக்க வேண்டும். நாம் எந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமோ, அதனை உடனே தொடங்க வேண்டும். உண்மையில், நாம் 5 ஆண்டுகளுக்கு முன்பாக எந்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமோ, அதனை நாம் எடுக்கவில்லை. நாம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் நாடு துயரத்தை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் எனத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.