மாநிலங்களவை நாளை காலை 10 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 1 ஆம் தேதி மக்களவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதம் நடைபெற்று வரும் நிலையில் மாநிலங்களவை நாளை காலை 10 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.