உத்தரப் பிரதேசத்தில் 7-வது கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ள 3 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஏற்கெனவே முதலிரண்டு கட்ட வாக்குப் பதிவுகள் முடிவடைந்தன. இந்த நிலையில், அங்கு கடைசி கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ள வாரணசியின் சேவாபுரி மற்றும் ராபர்ட்ஸ்கன்ஜ் ஆகிய தொகுதிகளுக்கு ஏற்கெனவே எம்எல்ஏ-க்களாக உள்ள முறையே நீல்ரதன் சிங் படேல் மற்றும் பூபேஷ் சௌபே ஆகியோரை பாஜக வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.
துத்தி தொகுதியில் ராம்துலர் கௌர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அங்கு நீண்டு நாள்களாக பாஜக வெற்றி பெறாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.