உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின் 5-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தொடங்கியது.
உத்தரப் பிரதேசத்தில் 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஏற்கெனவே முதல் 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், 5-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியுள்ளது.
இதையும் படிக்க | தில்லி வந்தடைந்தது 2ஆவது விமானம்: அமைச்சர்கள் வரவேற்பு
சித்ரகூட், பிரயாக்ராஜ் உள்பட 12 மாவட்டங்களில் உள்ள 61 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அமேதி, ரேபரலி, ராமர் கோயில் அமையவுள்ள அயோத்தி தொகுதிகள் அடங்கும். இதனால், 5-ம் கட்ட வாக்குப்பதிவு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
துணை முதல்வர் கேச பிரசாத் மௌரியா சிராத்து தொகுதியில் போட்டியிடுகிறார்.
5-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தால், 292 தொகுதிகளுக்கான தேர்தல் நிறைவடையும். மீதமுள்ள தொகுதிகளுக்கு மார்ச் 3 மற்றும் மார்ச் 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும்.