புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

பிகார்: துணை முதல்வர்கள், அமைச்சர்களுக்கு கரோனா

பிகார் மாநிலத்தின் துணை முதல்வர்கள் மற்றும் மாநில அமைச்சர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

துணை முதல்வர் ரேணு தேவி

Updated On :5 ஜனவரி 2022, 6:07 am

பிகார் மாநிலத்தின் துணை முதல்வர்கள் மற்றும் மாநில அமைச்சர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் தினசரி பாதிப்புகளும் மிக வேகமாக உயர்ந்து வருகிறது. இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் என்ணிக்கை 2,000-யைக் கடந்திருக்கிற நிலையில் பிகார் மாநிலத்தின் துணை முதல்வர்களான ரேணு தேவி, தர்கிஷோர் பிரசாத் மற்றும் அமைச்சர்கள் சுனில் குமார், அசோக் சௌத்ரி, விஜய் சௌத்ரி ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அம்மாநிலத்தில் நாளை(ஜன.6) முதல் ஜன.21 வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

முன்னதாக, தில்லி முதல்வர் கெஜ்ரிவால் நேற்று(ஜன.4) கரோனாவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.