புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தேர்தலை பாதுகாப்பாக நடத்த ஒரே வழி இதுதான்: சொல்கிறார் பிரசாந்த் கிஷோர்

தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பிரசாரத்தை எளிதாக நடத்த முடிவு செய்துள்ள அரசியல் கட்சிகள், பேரணிகளையும் பொதுக்கூட்டங்களையும் ரத்து செய்துள்ளன.

News image

பிரசாந்த் கிஷோர் (கோப்புப்படம்)

Updated On :7 ஜனவரி 2022, 10:22 am

DIN

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, ஒமைக்ரான் காரணமாக கரோனா வேகமாக பரவிவருகிறது. இச்சூழ்நிலையில், தேர்தலை நடத்துவது மிகவும் கடினமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தேர்தலை பாதுகாப்பாக நடத்த தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோ ஆலோசனை ஒன்றை கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் குறைந்தது 80% பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்த வேண்டும். அதிகரித்துவரும் தொற்றுநோய்களுக்கு மத்தியில் தேர்தலை நடத்த இதுவே பாதுகாப்பான வழி.

மற்றவை எல்லாம் முட்டாள்தனமான நடவடிக்கைகள்தான்.
யாரும் பின்பற்றாத கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுவது அபத்தமாக உள்ளது" என்றார்.

தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களின் தடுப்பூசி விவரங்கள் குறித்து மத்திய அரசு தேர்தல் ஆணையத்திடம் நேற்று விவரித்தது. 

கரோனா அதிகரித்துவருவதால், தேர்தலை தள்ளி வைக்கலாம் என அலகாபாத் உயர் நீதிமன்றம் ஆலோசனை கூறிய நிலையில், தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தேர்தல் ஆணையம் ஆய்வு மேற்கொண்டது. மாநிலங்களில் பிரசாரத்தை எளிதாக நடத்த முடிவு செய்துள்ள அரசியல் கட்சிகள், பேரணிகளையும் பொதுக்கூட்டங்களையும் ரத்து செய்துள்ளன.

ஆனால், இதுவரை பொதுக்கூட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்கவில்லை. ஒமைக்ரான் லேசான தருவதாகவும் இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை என தேர்தல் ஆணையத்திடம் மத்திய அரசு கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.