ஒமைக்ரானிலிருந்து மீண்டவர்களை கடுமையாக துன்புறுத்தும் வலி

ஒமைக்ரானிலிருந்து மீள்பவர்களுக்கு தாங்க முடியாத முதுகுவலி சில நாள்களுக்கு நீடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒமைக்ரானிலிருந்து மீண்டவர்களை கடுமையாக துன்புறுத்தும் வலி
ஒமைக்ரானிலிருந்து மீண்டவர்களை கடுமையாக துன்புறுத்தும் வலி


மும்பை: ஒமைக்ரான்.. லேசான அறிகுறிகள் மட்டுமே தென்படும் என்ற அடையாளத்துடன் அறிமுகமான தொற்று. ஒரு சில நாள்களிலேயே ஒமைக்ரானிலிருந்து விடுபட்டாலும், அதிலிருந்து மீள்பவர்களுக்கு தாங்க முடியாத முதுகுவலி சில நாள்களுக்கு நீடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒமைக்ரானிலிருந்து மீண்டுவரும் சிலருக்கு முதுகுவலியுடன், இடுப்பு வலியும் சேர்ந்து கொள்வதாகவும் கூறப்படுகிறது.

ஒமைக்ரான் பாதிப்பின் போது லேசான தொண்டை வலி, குளிர், காய்ச்சல் இருந்தது. ஆனால் ஒரு சில நாள்களுக்குப் பின் கால்கள் மற்றும் முதுகில் வலி ஏற்பட்டது. எனது அனைத்து எலும்புகளும் வலியை உணர்ந்தன. பாராசிடாமலுடன் சில வலி நிவாரணிகளையும் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்கிறார்கள் சிலர்.

சிலரோ, இடுப்பு வலி கடுமையாக இருந்தது. ஆனால், பாராசிடமால் எடுத்துக் கொண்டதும் சற்று குணம் கிடைத்தது. இப்படியே சில நாள்களுக்கு நீடித்தது என்கிறார்கள்.

சிலருக்கோ மயக்கம், உடல் சோர்வு போன்றவை ஒமைக்ரான் பாதித்து ஏழாவது அல்லது எட்டாவது நாளில் ஏற்படுவதாகவும் கூறுகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com