கரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
நாட்டில் அதிகரித்து வரும் கரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று நிலவரங்களைப் பற்றியும் தடுப்பூசி விவரங்கள் குறித்தும் பிரதமர் மோடி இன்று மாலை 4.30 மணிக்கு அனைத்து மாநில முதல்வர்களுடன் கானொலி வாயிலாக ஆலோசனை நடத்த இருக்கிறார்.
கரோனா பரவலின் தீவிரத்தால் அரசியல் தலைவர்கள் பலருக்கும் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் புதிய கட்டுப்பாடுகள் எதாவது அறிவிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.