மேகாலய மாநில முதல்வர் கான்ராட் சங்மாவுக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கரோனா தொற்று பரவல் வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் மேகாலய மாநில முதல்வர் கான்ராட் சங்மா கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டுரைப் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | காஷ்மீரில் அடுத்த 64 மணி நேரத்துக்கு முழு ஊரடங்கு
இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பதிவில், “எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். எனக்கு லேசான அறிகுறிகள் உள்ளன. கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.