இந்தியா
மும்பை கட்டட விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு: பிரதமர் அறிவிப்பு
மும்பை கட்டட விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
மும்பை கட்டட விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
மும்பை டார்டியோ பகுதியிலுள்ள 20 மாடி குடியிருப்புக் கட்டடத்தில் இன்று (சனிக்கிழமை) காலை ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 15-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தரைதளம் மற்றும் 20 மாடிகளைக் கொண்ட கட்டடத்தின் 18-வது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தை சில மணி நேரங்களில் தீயணைப்புத் துறையினர் அணைத்தனர்.
இந்நிலையில், மும்பை கட்டட விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சமும் காயமடைந்தோருக்கு ரூ. 50,000-ம் இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.