குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் அறிவுரையின்படி, ஹைதராபாத்தில் அவர் தனிமைப்படுத்திக்கொண்டார்.
இது தொடர்பாக குடியரசு துணைத் தலைவரின் செயலாளர் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஹைதராபாத்தில் உள்ளார். அவருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் ஒரு வாரத்திற்கு தனிமைப்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளார். மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கரோனா பரிசோதனை செய்துகொண்டு தனிமைப்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.