கேரளத்தில் பரிசோதனை மேற்கொள்ளும் இருவரில் ஒருவருக்கு கரோனா பாதிப்பு

கேரளத்தில் ஒரேநாளில் 55,475 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
கேரளத்தில் மேலும் 55,475 பேருக்கு கரோனா தொற்று
கேரளத்தில் மேலும் 55,475 பேருக்கு கரோனா தொற்று

கேரளத்தில் ஒரேநாளில் 55,475 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 1,12,281 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில் புதிதாக 55,475 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் 30,226 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேசமயம் கரோனாவுக்கு இன்று 70 பேர் பலியாகியுள்ளனர். 

இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 52,141 ஆக உயர்ந்துள்ளது. 2,85,365 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளத்தில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் நேர்மறை விகிதம் 49.40 சதவீதத்தைத் தொட்டுள்ளது. கரோனா சோதனை செய்யப்பட்ட இருவரில் ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பதை இது குறிக்கிறது.

கேரளத்தில் தற்போது 84 சதவீத பேருக்கு இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com