நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,159 பேருக்கு கரோனா!
நாட்டில் செவ்வாய்க்கிழமை கரோனா பாதிப்பு 13,086 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 16,159 ஆக அதிகரித்துள்ளது. 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 13,086 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, மேலும் புதிதாக 16,159 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,35,34,723-ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,15,212 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.26 சதவீதமாக உள்ளது.
தொற்று பாதித்தவர்களில் புதிதாக 28 பேர் இறந்துள்ளனர். இதனால் தொற்றுக்கு இறந்தோரின் எண்ணிக்கை 5,25,270 ஆக அதிகரித்துள்ளது. இறந்தோரின் விகிதம் 1.21 சதவீதமாக உள்ளது.
இதையும் படிக்க | 10.371 ஆசிரியர் பணியிடங்களுக்கான அட்டவணை வெளியீடு!
கரோனாவில் இருந்து 15,394 போ் குணமடைந்துள்ளனா். இதனால் இதுவரை குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 4,29,07,327-ஆக அதிகரித்துள்ளது என்று குணமடைந்தோர் விகிதம் 98.53 சதவீதமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 1,98,20,86,763 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை மட்டும் 9,95,810 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.