தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

தெலங்கானாவில் கனமழை: 19 ஆயிரம் பேர் முகாம்களில் தங்கவைப்பு 

தெலங்கானாவில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

News image
Updated On :14 ஜூலை 2022, 5:28 pm IST

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

மாநிலத்தில் இடைவிடாது பெய்துவரும் மழையால் ஏற்பட்டுள்ள நிலைமையை ஆய்வு செய்வதற்காக தலைமை செயலாளர் சோமேஷ் குமார் இன்று அதிகாரிகளுடன் ஒரு கூட்டத்தை நடத்தினார். மேலும் நிலமை கட்டுக்குள் உள்ளதாகவும், பெரிய சேதம் எதுவும் பதிவாகவில்லை என்றும் அவர் தெரிவித்தார். 

மாநிலத்தில் உள்ள 223 முகாம்களில் 19,071 பேர் மாற்றப்பட்டுள்ளனர் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவித்துள்ளது. 

மாநிலத்தில் பாதிக்கப்பட்ட 16 பேரை தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் மீட்டனர் மற்றும் இந்திய விமானப்படை 2 நபர்களையும் விமானம் மூலம் மீட்டது. 

முலுகு, பூபாலப்பள்ளி மற்றும் பத்ராத்ரி-கொத்தகுடம் ஆகிய மாவட்டங்களில் கோதாவரி நதி வேகமாகப் பாய்வதால் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று தலைமைச் செயலாளர் தெரிவித்தார். 

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுவர் இடிந்து மற்றும் மின்கசிவால் இதுவரை 10 உயிரிழந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.