உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

சுஷ்மிதா சென்னின் முன்னாள் காதலர் சொன்ன ரகசியக் குறிப்பு

சுஷ்மிதா சென்னின் முன்னாள் காதலர் ரோஹ்மன் ஷாவால் ஒரு ரகசியக் குறிப்பை பகிர்ந்துள்ளார்.

சுஷ்மிதா சென்னின் முன்னாள் காதலர் சொன்ன ரகசியக் குறிப்பு

Published On :


புது தில்லி: முன்னாள் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென்னுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து, என்னில் சிறந்த பாதி என்று லலித் மோடி டிவிட்டரில் பகிர்ந்திருந்த நிலையில், சுஷ்மிதா சென்னின் முன்னாள் காதலர் ரோஹ்மன் ஷாவால் ஒரு ரகசியக் குறிப்பை பகிர்ந்துள்ளார்.

சுஷ்மிதா சென்னுடன் உலக சுற்றுலா சென்றுவிட்டு லண்டன் திரும்புவதாக, லலித் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிவிட்டிருந்தார்.

இந்த புகைப்படங்கள் அன்றைய தினம் சமூக வலைத்தளங்களை திக்குமுக்காட வைத்த நிலையில், இது குறித்து சூசகமாக, சுஷ்மிதா சென்னின் பெயரைக் குறிப்பிடாம்ல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரகசியக் குறிப்பை பகிர்ந்துள்ளார்.

அதாவது, யாருடன் இருக்கும் போது புன்னகைபுரிந்தால் உனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறதோ அப்போது புன்னகை செய்!! ஏனென்றால் பிரச்னை அவர்கள் அல்ல, நீதான்!! #அன்பை பரப்புவோம் வெறுப்பை அல்ல என்றும் பதிவிட்டுள்ளார்.

2018ஆம் ஆண்டு முதல் ரோஹ்மன் ஷாவாலுடன் சுஷ்மிதா சென் நெருங்கிப் பழகி வந்தார். இவர்கள் கடந்த ஆண்டு பிரிவதாக அறிவித்தனர்.

Story image

இந்த நிலையில்தான், நிலவில் இருப்பது போல உணர்கிறேன் என்று லலித் மோடி, சுஷ்மிதா சென்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சுட்டுரையில் பகிர்ந்து, டிவிட்டரையே சூடாக்கியிருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.