‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நான் ஒன்றும் குற்றவாளியில்லை: சிங்கப்பூர் பயணம் குறித்து அரவிந்த் கேஜரிவால்

சிங்கப்பூரில் நடைபெறும் உலக மாநாட்டில் கலந்துகொள்ள அனுமதி அளிப்பதில் தாமதம் அரசியல் பின்னணி கொண்டது என்று தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி நிறுவனருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

News image

'நான் ஒன்றும் குற்றவாளியில்லை': சிங்கப்பூர் பயணம் குறித்து அரவிந்த் கேஜரிவால்

Updated On :18 ஜூலை 2022, 12:45 pm

ANI


புது தில்லி: சிங்கப்பூரில் நடைபெறும் உலக மாநாட்டில் கலந்துகொள்ள அனுமதி அளிப்பதில் தாமதம் அரசியல் பின்னணி கொண்டது என்று தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி நிறுவனருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

நான் ஒன்றும் குற்றவாளியில்லை. இந்த நாட்டில் உள்ள ஒரு மாநிலத்தின், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர். சிங்கப்பூரில் நடைபெறும் உலக நகரங்கள் மாநாட்டில் பங்கேற்பதிலிருந்து என்னை தடுப்பதற்கு எந்த காரணம் இருக்கிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இந்த பயணத்தால் இந்தியாவுக்கு மேலும் சில பொலிவூட்டும் திட்டங்கள்தான் கிடைக்கும் என்று கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெறும் உலக நகரங்கள் மாநாட்டில் பங்கேற்க வருமாறு அரவிந்த் கேஜரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதனை ஏற்று அவரும் வருவதாக உறுதியளித்திருக்கும் நிலையில், தான் சிங்கப்பூர் பயணம் மேற்கொள்ள மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருந்தார்.

அதற்கு ஒப்புதல் அளிக்கப்படாத நிலையில், இது குறித்து நேற்று பிரதமர் நரேந்திர மோடியையும் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.