கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அரிசி, பருப்புக்கு ஜிஎஸ்டி: நிர்மலா சீதாராமன் விளக்கம்

சில்லறை விற்பனையில் பைகளில் அடைக்கப்படாத அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.

News image

அரிசி / கோதுமை (கோப்புப் படம்)

Updated On :19 ஜூலை 2022, 5:01 pm

DIN

சில்லறை விற்பனையில் பைகளில் அடைக்கப்படாத அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.

அதன்படி பைகளில் அடைக்கப்படாத அரிசி, பருப்பு, கோதுமை, கம்பு, கோதுமை மாவு, ரவை, தயிர் உள்ளிட்ட பொருள்களுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி பொருந்தாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

நிா்மலா சீதாராமன் தலைமையில் கடந்த மாதம் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், அமைச்சா்கள் குழுவின் இடைக்கால அறிக்கையின் அடிப்படையில்  வரியை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி பைகளில் அடைக்கப்பட்ட (பாக்கெட்) அரிசி, தானியங்கள் உள்ளிட்டவற்றுக்கு 5 சதவிகித சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) விதிப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. மேலும், திங்கள்கிழமை (ஜூலை 18) முதல் நடைமுறைக்கும் கொண்டுவரப்பட்டது. 

இதனால் பொருள்களின் விலை உயர வாய்ப்புள்ளதாகவும், நடுத்தர, ஏழை மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும் எதிர்ப்புகள் எழுந்தன. மேலும், உணவு தானியங்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், அரிசி, பருப்பு உள்ளிட்ட தானியங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி குறித்து சுட்டுரையில் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது, சில்லறை விற்பனையில் பைகளில் அடைக்கப்படாத, சீலிடப்படாத தானியங்களுக்கும் ஜிஎஸ்டி இல்லை. அவற்றிற்கு ஜிஎஸ்டி பொருந்தாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எந்தெந்த பொருள்களுக்கு ஜிஎஸ்டி பொருந்தாது என்பதையும் பட்டியலிட்டுள்ளார். அதன்படி, அரிசி, பருப்பு, கோதுமை, ரவை, கோதுமை மாவு, ஓட்ஸ், தயிர் போன்றவற்றிற்கு ஜிஎஸ்டி இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது சில்லறையாக பைகளில் அடைக்கப்படாமல் கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருள்களுக்கு ஜிஎஸ்டி பொருந்தாது. ஆனால், பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் பொருள்களுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி பொருந்தும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.