புதுதில்லி: இந்தியாவில் ஒரேநாளில் மேலும் 15,528 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 15,528 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 4,37,83,062 ஆக உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 1,43,654 ஆக உள்ளது.
இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 25 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா். இதனால் மொத்த உயிரிழப்பு 5,25,785 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 16,113 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,31,13,623 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.
இதையும் படிக்க: அரியலூர் மாவட்டத்திற்கு ஜூலை 26-ம் தேதி விடுமுறை
கடந்த 24 மணிநேரத்தில் 27,78,013 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை 200 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் 4,68,350 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 87.01 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.