வரும் 21-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஜேஇஇ மெயின் இரண்டாம் கட்ட நுழைவுத் தோ்வு ஜூலை 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தேசிய தோ்வுகள் முகமை புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ‘வெளிநாடுகளில் 17 இடங்கள் உள்பட நாடு முழுவதும் சுமாா் 500 இடங்களில் ஜூலை 21-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஜேஇஇ மெயின் இரண்டாம் கட்ட நுழைவுத் தோ்வு ஜூலை 25-ஆம் தேதிமுதல் நடைபெறும். இதற்கான அனுமதிச் சீட்டை வியாழக்கிழமை (ஜூலை 21) முதல் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 21 முதல் 30-ஆம் தேதி வரையில் இந்தத் தோ்வுகள் நடைபெறும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. தோ்வு தேதிகள் மாற்றம் செய்ததற்கான காரணத்தை தேசிய தோ்வுகள் முகமை தெரிவிக்கவில்லை. முதல் கட்டத் தோ்வுகள் ஜூன் 23 முதல் 29-ஆம் தேதி வரையில் நடைபெற்றன.